தலைவாசல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை!

 
slm

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு. 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஆரத்தி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் முத்தையன் (46). இவர் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி, புத்துர் கிழக்கு வீதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்த 15 வயது சிறுமியை, முத்தையன் கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்தார். 

judgement

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைவாசல் போலீசார், முத்தையனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில், நீதிபதி  ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார். அப்போது, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் முத்தையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.