ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - சிறுவன் போக்சோவில் கைது!

 
rape

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய, 9ஆம் வகுப்பு மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுந்தரேசபுரம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவரும் பழகி வந்துள்ளனர். அப்போது, மாணவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

arrest

புகாரின் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 15 வயது மாணவர், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, போலீசார் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.