பார்வை குறைபாடுடைய பெண்ணிற்கு பாலியல் தொல்லை - போலீசார் விசாரணை!
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பார்வை குறைபாடு உள்ள பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு பார்வை குறைபாடு பிரச்சினை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அவருக்கு பார்வை முழுமையாக தெரியாது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இரவில் அந்த பெண் இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு செல்லும்போது, மர்மநபர் ஒருவர் அவரது வாயில் துணியால் அடைத்து, கட்டாயப்படுத்தி அவருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், தனது குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்வை குறைபாடு உடைய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.