கத்தியை காட்டி மிரட்டி சிறுவனுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

மதுரை செல்லூரில் கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் அழகர் மகன் ரஞ்சித்குமார்(20). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன், தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தான். அப்போது, அங்கு வந்த ரஞ்சித்குமார், கத்திமுனையில் சிறுவனை அங்குள்ள குடோனுக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவரவே, ரஞ்சித்குமார் தப்பியோடி உள்ளார்.

arrested

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ரஞ்சித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.