திருமணமான ஒரு மாதத்தில் கணவரை பிரிந்த தங்கை... வேதனையில் உயிரை மாய்த்த இளைஞர்!

 
suicide

பெருந்துறை அருகே திருமணமான ஒரு மாதத்தில் தங்கை கணவரை பிரிந்து சென்றதால் விரக்தியில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் ரீட்டா. இவருக்கு அகிலன்(25) என்ற மகனும், அகல்யா என்ற மகளும் உள்ளனர். அகல்யா, அண்ணன் உறவு முறையிலான இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அகல்யாவின் உறவினர்கள், கடந்த ஓரு மாதத்திற்கு முன்பு அவருக்கு நீலகிரியை சேர்ந்த நபருடன் திருமணம் செய்து வைத்தனர். தனக்கு விருப்பமில்லாத நபருடன் திருமணம் செய்து வைத்ததால் வேதனையடைந்த அகல்யா, கணவருடன் சேர்ந்து வாழாமல் கடந்த வாரம் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

perundurai govt hospital

தங்கையின் செயலால் அகிலன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர அளித்தும் பலனின்றி அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் காஞ்சிக்கோயில் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தாய் ரீட்டா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.