தாய் இறந்த வேதனையில் மகன் விஷம் குடித்து தற்கொலை!

 
poison

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாய் இறந்த வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மறைஞாயநல்லூர் சர்வகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (50) விவசாயி. இவரது தாயார் கமலாம்பாள் (80). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தாயின் மீது அதிக அன்பு கொண்டிருந்த நாகராஜன் அவரது மறைவால் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். எனினும் அவரால் தாயார் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியவில்லை.

nagai

இந்த நிலைலயில், நேற்று வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த நாகராஜனை குடும்பத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் வேதாரண்யம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த வேதனையில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.