தென்னிந்தியாவின் முதல் டோம் தியேட்டர் ஈரோட்டில் திறப்பு!

 
dome theater

சோட்டு மகாராஜ் சினி கபே நிறுவனம் மற்றும் ப்ளூமூன் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் ஈரோட்டில் தென்னிந்தியாவின் முதல் டோம் தியேட்டர் நேற்று திறக்கப்பட்டது.

வடஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் சோட்டு மகாராஜ் சினி கபே நிறுவனம் தென்னிந்தியாவில் முதன்முறையாக ஈரோட்டில் ப்ளூமூன் சினிமாஸ் உடன் இணைந்து டோம் தியேட்டரை துவங்கி உள்ளது. இந்த தியேட்டர் வாளகத்தை நேற்று லோட்டஸ் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக மேலாளர் பெரியசாமி திறந்து வைத்தார். அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக மேலாளர் சின்னசாமி பாக்ஸ் ஆபீஸ் புக்கிங்கை தொடங்கி வைக்க, தொடர்ந்து ஆர்ஆர் துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி சினி கபே கேன்டீனை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

dome theater

தொடர்ந்து எம்சிஆர் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக மேலாளர் ராபின் மற்றும் சிடீ குரூப் ஆப் கம்பெனி பங்குதாரர் வெங்கடேஷ்வரன் , பிஎன்ஐ மேலான்மை இயக்குநர் மகேஷ் பிவி கிரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி படக்காட்சியை துவக்கி வைத்தனர். இந்த விழாவில் சோட்டு மகாராஐ் தென்னிந்தியாவின் முதன்மை மேலாளர் சமீர் சோமய்யா கலந்துகொண்டார். அவர் கூறுகையில்,  சோட்டு மகாராஐ் தென்னிந்தியாவில் ஈரோட்டில் முதன்முறையாக ப்ளூ மூன் சினிமாஸ் உடன் இணைந்து எங்களது முதல் பயணத்தை தொடங்கியுள்ளோம். மேலும் தமிழ்நாட்டில்  உள்ள முக்கிய நகரங்களில் ப்ளூமூன் சினிமாஸ் உடன் சேர்ந்து உருவாக்க உள்ளோம் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சிற்றம்பலம் பப்பு மற்றும் அங்காடி தெரு மகேஷ், ஜான்வி, கன்னட சீரியல் நட்சத்திரம் சோப்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் ப்ளூ மூன் சினிமாஸ் பங்குதாரர்கள்  ஆர்கே கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், தினேஷ் தங்கமுத்து, அரவிந்த்  கிருஷ்ணா, இரங்கநாதன், உசேன், ப்ளூ மூன் சினிமாஸ் மேலாளர் இராம்மோகன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.