ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4ஆம் நாள் உற்சவம்: முத்து சாய கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவத்தின் 4ஆம் நாளான இன்று நம்பெருமாள்  முத்து சாய கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 4ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்து சாய கொண்டை, வைர அபயஹஸ்தம், வைர பதக்கம், முத்துச்சரம், பவள மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி காட்சி அளித்தார்.

srirangam

மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்து, பின்னர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். நம்பெருமாள் புறப்பாடுடன் பன்னிரு ஆழ்வார்களும் வலம் வந்து, அர்ஜுன மண்டபம் அடைந்தனர். நாள்தோறும் காலை மாலை வேளைகளில் தலா 200  திவ்ய பிரபந்த பாசுரங்கள், வேத விண்ணப்பர்களால் விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஓட்டி, மூலவர் முத்தங்கி சேவையில் காட்சியளித்து வருகிறார்.

இதனை ஆயிரக்கணக்கான பகதர்கள் . சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி காலையும், முக்கிய திருவிழாவான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு வரும் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையும் நடைபெற உள்ளது.