ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.83.45 லட்சம் வசூல்!

 
srirangam hundial

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.83.45 லட்சம் ரொக்கப்பணம், 305 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி ஆகியவை வசூலாகி உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்குரியது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து செல்வர். மேலும், பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.

srirangam

கோவில் உண்டியல்கள் மாதம்தோறும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். அதன்படி நடப்பு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் இணை மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. மலைக்கோட்டை கோவில் தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் கோவில் மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள், தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் காணிக்கைகயை எண்ணினர்

முடிவில் கோவில் உண்டியல் காணிக்கையாக 83 லட்சத்து 45 ஆயிரத்து 468  ரொக்கப்பணம் வசூலானது. மேலும்,  305 கிராம் தங்கம், 1 கிலோ 534 கிராம் வெள்ளியும், டாலர் உள்ளிட்ட 178 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.