ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!

 
poison

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன்(22). இவர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நட்களுக்கு முன்பு விடுதியில் இருந்த மணிகண்டன் திடீரென மாயமாகினார். இதனால் அவரை பெற்றோர் தீவிரமாக தேடி வந்தனர்.

krishnankovil

இந்த நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி விடுதியின் 7-வது மாடியில் உள்ள அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து, விடுதி நிர்வாகிகள் சென்று பார்த்தபோது, அங்கு மாணவர் மணிகண்டன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.