பார்வை குறைபாட்டினால் அவதி... வேதனையில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
 suicide

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியை சேர்ந்தவர் கனகபாஸ். இவரது 16 வயது மகள் மெர்சி . இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த வந்தார். இந்த நிலையில், மெர்சிக்கு சிறு வயது முதலே பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் பார்வை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

kumari gh

அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த மெர்சி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மெர்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கனபாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டார் போலீசார், மெர்சியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பார்வை குறைபாட்டில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.