திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்!

 
suicide

பெரம்பலூர் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள எசனைகாட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு கவிதா(23) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, மதுப் பழக்கத்துக்கு அடிமையான மணிகண்டன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதில் கவிதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

perambalur gh

இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், கவிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த  அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் கவிதா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.