கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஓட்டப்பிடாரம் அருகே சோகம்!

 
suicide

தூத்துக்குடி அருகே விபத்தில் கணவர் உயிரிழந்ததால், வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள்(28).  கூலி தொழிலாளி. இவரது மனைவி பார்வதி(23). கடந்த வியாழக்கிழமை அன்று ஆறுமுக பெருமாள் கொம்பாடி தளவாய்புரத்துக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது வாகனம் மீது லாரி மோதியதில் ஆறுமுக பெருமாள் படுகாயம் அடைந்தார்.

ottapidaram

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடலுக்கு உறவினர்கள் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டனர். இதனிடையே, கணவர் உயிரிழந்ததால் பார்வதி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டின் கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், ஓட்டப்பிடாரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.