கிராமத்தினர் முன்னிலையில் அவமதிப்பு செய்ததால் விரக்தி... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
dead

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே  தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே  உள்ள செய்யாற்றை வென்றான் பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகள் வளர்மதி(19). இவர் செய்யாறில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வளர்மதிக்கு, அதே பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வளர்மதியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் வளர்மதி குடும்பத்தினருக்கும்,  விநாயகம் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

cheyyar

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வளர்மதியை, விநாயகத்தின் மனைவி புனிதா கிராமத்தினர் முன்னிலையில் செருப்பால் அடித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த  வளர்மதி தனது வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். தகவலின் பேரில் அனக்காவூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார், விநாயகம் மற்றும் அவரது மனைவி புனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.