கமுதி அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்!

 
dead

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ள நல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் - கார்த்திகை செல்வி தம்பதியினர். இவர்களது மகள் பானுமதி(24). இவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் சிவா என்பருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், சிவாவுக்கும் - பானுமதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பானுமதி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாலை தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

kamuthi

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பானுமதி, கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பரளச்சி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 ஆண்டுகளில் பானுமதி இறந்ததால் இந்த சம்பவம் குறித்து பரமக்குடி ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடும்ப தகராறில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.