பொன்னமராவதியில் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை!

 
suicide

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி திவ்யா(29). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் குடும்ப செலவுக்காக பலரிடமும் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொடர் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனார். இது குறித்து கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த திவ்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை திவ்யா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

ponnamaravathi

தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி போலீசார், திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.