குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை!

 
suicide

பெரம்பலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் வசித்து வருபவர் கார் ஓட்டுநர் ராஜிவ்காந்தி(30). இவருக்கு, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சங்கீதா(25) என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  இதனால் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தம்பதியினர் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், குழந்தை பேறு ஏற்பட வில்லை. இதனால் சங்கீதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

perambalur

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த சங்கீதா நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியூருக்கு சென்றிருந்த ராஜிவ்காந்தி நேற்று இரவு சென்றபோது, சங்கீதா தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமான 4 ஆண்டுகளில் சங்கீதா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.