சாலையில் நின்ற ஆட்டோவை லாவகமாக திருடிச் சென்ற கொள்ளையன்... சிசிடிவி காட்சி வெளியீடு!

 
theft

கோவையில் சாலையில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை மர்மநபர் ஒருவர் லாவகமாக திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி இரவு பூமார்க்கெட் பகுதியில் உள்ள அமுதசுரபி உணவகம் எதிரே ஆட்டோவை நிறுத்திவிட்டு, உணவு சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்துக்கு பின் வெளியே வந்து பார்த்தபோது, அவரது ஆட்டோ மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

cctv

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆட்டோ திருடுபோன பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரவு 10 மணி அளவில் மர்மநபர் ஒருவர், கணேசனினி ஆட்டோவை தள்ளிச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆட்டோவை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.