குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் திடீர் மரணம்... நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

 
dead body

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் படைவீடு பேரூராட்சியில் அலுவலக உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன்(53) என்பவர் பங்கேற்றிருந்தார். கூட்டத்தின் இடையே கழிவறைக்கு செல்வதற்காக வெளியே வந்த ஆனந்தன் திடீரென மயங்கி விழுந்தார்.

namakkal

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆனந்தன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.