திருவண்ணாமலை கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.23 கோடி வசூல்!

 
thiruvannamalai

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.23 கோடி ரொக்கப்பணம் மற்றும் அரை கிலோ தங்கம் உள்ளிட்டவை வசூலானது.

சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அருணாச்சலேஸ்வரரை தரிசித்து செல்வர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன் மற்றும் உண்டியல் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

hundiyal

 இதன்படி நடப்பு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர்  அசோக் குமார் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு காணிக்கையை எண்ணினர். இதில் கோவில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 23 லட்சத்து 72 அயிரத்து 5 ரூபாய் ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 552 கிராம் தங்கமும், 740 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.