திருவண்ணாமலை கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.60 லட்சம் வசூல்!

 
tiruvannamalai

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.60 லட்சம் ரொக்கப்பணம், 236 கிராம் தங்கம் மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவை வசூலாகி உள்ளது. 

சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலாமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒரு முறை, உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

hundial

இதன்படி,  பிப்ரவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பணி நேற்று காலை தொடங்கி இரவு வரை நீடித்தது. முடிவில், உண்டியல் காணிக்கையாக ரூ.60 லட்சத்து 9 ஆயிரத்து 536 ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 236 கிராம் தங்கம் மற்றும் 551 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.