திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.8 லட்சம் செல்போன்கள் மீட்பு!

 
tvr

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்களை போலீசார் மீட்டு,  அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செல்போன திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி., டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு திருடுபோன மற்றும் காணாமல் போன ரூ.8.10 லட்சம் மதிப்பிலான 75 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்டனர்.

tvr

இதனை தொடர்ந்து,  மீட்கப்பட்ட செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி டி.பி.சுரேஷ்குமார் கலந்து கொண்டு, செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதேபோல்,