வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் திமுகவை சேர்ந்த திருநங்கை கங்கா வெற்றி!

 
vellore

வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

வேலூர் மாநகாட்சியில் மொத்தமுள்ள 60 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

vellore

இந்த நிலையில் மாநகாட்சி 37-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா  வெற்றி பெற்றுள்ளார்.  இவர் 2,131 வாக்குகள் பெற்ற நிலையில், 2-ஆம் இடம் பிடித்த வேட்பாளர் 1,116 வாக்குளை பெற்றிருந்தார். இதனால் கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளார். வார்டு உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட திருநங்கை கங்காவுக்கு, சக திருநங்கைகளும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.