பெருந்துறையில் மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலி!

 
dead

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்(30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு நகர் 5-வது வீதியில் வாடகை வீட்டில் தங்கி, ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா(28) என்ற மனைவியும், 1 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். ரஞ்சித்தும், பெருந்துறை தோப்புபாளையம் பகுதியை சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் பிரகதீஷும்(25) நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் ரஞ்சித்தின் வீட்டிற்கு வந்த பிரகதீஷ், அவருடன் வீட்டின் மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டிருந்தார். 

perundurai govt hospital

அப்போது, எதிர்பாராத பிரகதீஷ் வீட்டின் மாடியில் சென்ற ஹெச்.டி மின்கம்பியை தொட்டுள்ளார். இதில் அவர் மின்சாரம் பாய்ந்ததால் உயிருக்கு போராடினார். இதனை கண்ட ரஞ்சித் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் தூக்கிவீப்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

 தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 இளைஞர்கள் பலியான சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.