திருப்பூர் அருகே சாலை தடுப்பு மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பலி!

 
accident

திருப்பூர் அருகே சாலை தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பின்னலாடை நிறுவன ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் அருகே உள்ள சென்னிமலை கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சந்திரமூர்த்தி(26). இவர் புதுப்பாளையத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து சந்திரமூர்த்தி, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் ஆட்டையாம்பாளையத்தில் தங்கியிருக்கும், தஞ்சையை சேர்ந்த தொழிலாளி கீர்த்திராஜா என்பவரும் சென்று கொண்டிருந்தார். 

tiruppur

கோவை - சேலம் சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட சந்திரமூர்த்தி, கிர்த்திராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் திருமுருகன் பூண்டி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.