தேவக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் - இருவர் பலி!

 
accident

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அடுத்த கண்ணங்கொசவகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் பசுபதி(26), முத்து. இவர்களது நண்பர் புதுக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம். இவர்கள் 3 பேரும் நேற்று இரவு காரைக்குடிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். தேவக்கோட்டை அடுத்த சடையன்காடு பகுதியில் வந்தபோது பசுபதி வாகனத்தின் மீது, எதிரே காரைக்குடி நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது.

devakottai

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த பசுபதி, மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முத்து பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆறாவயல் போலீசார், விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 2 இளைஞர்கள் பலியான சம்பவம் கண்ணங்கொசவகோட்டை கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.