ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இருவர் பலி!

 
accident

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்  இருவர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர்  தணிகாச்சலம். இவருக்கு ஜெயக்குமார்(18) என்ற மகனும், சஞ்சிதா(15) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார், சஞ்சிதா ஆகியோர் ஜெயங்கொண்டத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

ariyalur

அப்போது, எதிரே ஆலத்திப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(28), சலுப்பை கிராமத்தை கௌதம் (30) ஆகியோர் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஜெயக்குமார் மற்றும் கௌதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  மேலும், சஞ்சிதா, ரஞ்சித்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.