வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!
வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் இஞ்சுவாதுனிசா(67). இவருக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, அவர் வேலூர் தொரப்பாடி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிறையில் இருந்த இஞ்சுவாதுனிசாவுக்கு, மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனை அடுத்து, அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இஞ்சுவாதுனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.