கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை... சாத்தான்குளம் அருகே சோகம்!

 
poison

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கூட்டப்பனை கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மனைவி உஷா(45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜஸ்டின் புதிய வீடு கட்டுவதற்காக பலரிடமும் கடன் வாங்கியுள்ளார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை சரிவர கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர். இதனால் உஷா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு உஷா, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

tuti gh

அங்கு மனவேதனையில் அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த உஷாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கணவர் ஜஸ்டின் புகாரின் அடிப்படையில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.