கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... சங்ககிரி அருகே சோகம்!

 
suicide

சங்ககிரி அருகே விபத்தில் கணவர் இறந்ததால், வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். இவருக்கு கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி மாவெளிபாளையம் பகுதியை ரஞ்சனி(23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் மதன்குமார் உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து, ரஞ்சனி, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

salem

மேலும், கணவர் உயிரிழந்ததால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். எனினும் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரஞ்சனி, நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சங்ககிரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.