திண்டுக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... கோட்டாட்சியர் விசாரணை!

 
suicide
திண்டுக்கல் அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் முரளி(26). இவர் திண்டுக்கலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரஞ்சிதா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில்,  ரஞ்சிதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

dgl gh

இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரஞ்சிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், திருமணமான 3 ஆண்டுகளில் ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டதால் வரதட்சணை கொடுமை காரணமா? என திண்டுக்கல் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.