ஓட்டன்சத்திரம் அருகே குடும்ப தகராறில் பெண் வெட்டிக்கொலை - கணவர் வெறிச்செயல்!

 
murder

ஒட்டன்சத்திரம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவர்களுக்கு சந்தான கிருஷ்ணன் என்ற மகனும், வீரமணி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு ஆறுமுகம் - விஜயலட்சுமி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து விஜயலட்சுமியின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dgl

தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார், விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி ஆறுமுகத்தை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.