குமரி அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
dead

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் சிங்கராஜ். இவர் அந்த பகுதியில் பாட்டில், இரும்பு உள்ளிட்டவற்றை சேகரித்து, அற்றை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்து வந்தார். நாள்தோறும் அதிகாலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை 3 மணி அளவில் சிங்கராஜ் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து, காலை சுபாஷ்நகர் செல்லும் வழியில் உள்ள கோழிக்கடை ஒன்றில்  சிங்கராஜ் முகத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

kumari

இதனை கண்ட அந்த பகுதி மக்கள், ஆரல்வாய்மொழி  காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.