மாமியார் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை... பொன்னமராவதி அருகே சோகம்!

 
poison

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மீனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 3 வயதில் முத்தழகி என்ற மகள் உள்ளார். முருகேசன், கோவையில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலைசெய்து வருகிறார். இதனால், மாதம் ஒரு முறை வீட்டிற்கு சென்று மனைவி, பிள்ளையை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மீனாவுக்கும், அவரது மாமியார் ராமாயிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த மீனா வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

ponnamaravathi

உயிருக்கு ஆபத்தான நிலையில், மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மீனாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் மீனா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து இழுப்பூர் ஆர்.டி.ஓ குழந்தைசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.