விழுப்புரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
விழுப்புரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணைவிழுப்புரம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள நாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித். தொழிலாளி. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த சத்யா தமிழ் (21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், அஜித், தமிழ் சத்யாவின் பெற்றோரிடம் பணம் வாங்கி வர கூறி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கணவர் அஜித் தாக்கியதில், படுகாயமடைந்த சத்யா தமிழ், சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யா தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, சத்யா தமிழின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது தந்தை கலியமூர்த்தி வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் வீட்டாரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 5 ஆண்டுகளில் சத்யா தமிழ் இறந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.