திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஆம்பூர் அருகே சோகம்!

 
suicide

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் யுவராஜ்(34).  தொழிலாளி. இவரது மனைவி பவ்யஸ்ரீ(29). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பவ்யஸ்ரீ மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

ambur

இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பவ்யஸ்ரீயின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் பவ்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.