நாமக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
suicide

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் பணிபுரிந்த வடமாநில இளம்பண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்துராம் கவுடே. இவரது 18 வயது மகள் மணிஷா கவுடே. இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக மணிஷா கவுடே மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உடன் பணிபுரியும் பெண்கள் அவரது அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.

namakkal GH

அப்போது, மணிஷா குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.