திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஆத்தூர் அருகே சோகம்!

 
suicide

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆரியபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. இவரது மகள் ரம்யா(26). முதுகலை பட்டதாரியான இவர், அந்த பகுதியில் வார்டு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், ரம்யாவுக்கு, கடந்த ஜுன் மாதம்  அதே கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ரம்யா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெற்றிவேல், ரம்யாவின் தந்தைக்கு போன் செய்து, அவர் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

salem

இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, தனது மகளின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 2 மாதங்களில் ரம்யா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.