திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ராமநாதபுரம் அருகே சோகம்!

 
suicide

ராமநாதபுரம் அருகே திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி பஞ்ச வர்ணம். இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது பஞ்சவர்ணம் கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே, சிவகுமாருக்கும், பஞ்ச வர்ணத்துக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

kenikkarai

தகவல் அறிந்த பஞ்சவர்ணத்தின் பெற்றோர், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பஞ்சவணர்த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 8 மாதத்தில் பஞ்சவர்ணம் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.