திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... பெரம்பலூர் அருகே சோகம்!

 
fire accident

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் செங்கமேட்டை சேர்ந்த மதியழகி (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், மதியழகிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாகபோது, முத்தழகி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

v kalathur

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தழகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தழகியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 3 ஆண்டுகளில் முத்தழகி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.