திருமணமான 7 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை... திருச்சி அருகே சோகம்!

 
suicide

திருச்சி அருகே திருமணமான 7 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பரிமளா. இவருக்கு, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்த சதிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சதீஷுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை கைவிடும்படி பரிமளா கூறியதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இதில் பரிமளா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

thuraiyur

இதுகுறித்து பரிமளாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 7 மாதத்தில் பரிமளா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.