தேனி அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை... ஆர்.டி.ஓ விசாரணை!

 
dead

தேனி மாவட்டம் கூடலூரில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கராசு. இவரது மகன் நவீன். கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன் அர்ச்சனா(19) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் அர்ச்சனா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் கடந்த வெள்ளிக் கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

theni

தகவலின் பேரில் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அர்ச்சனாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 8 மாதத்தில் அர்ச்சனா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.