திருச்சியில் சிறுமிக்கு தொல்லை அளித்த இளைஞர் போக்சோவில் கைது!

 
arrest

திருச்சியில் 16 வயது சிறுமிக்கு காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்த கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (20). இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பிரவீன் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் அவரை காதலிப்பதாக கூறி, சிறுமியுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளார். அதனை நண்பர்களிடம் காண்பித்து தான் திருமணம் செய்யப் போகும் பெண் என கூறி வந்துள்ளார். 

police

மேலும், பிரவீனின் தாய், அந்த சிறுமியிடம் தனது மகனை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்த விவகாரம் அறிந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.