பெரியகுளத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது!

 
rape

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 17 வயது மகள், தேனி நகரில் உள்ள கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, சிறுமிக்கு, கொடுவிலார்பட்டியை சேர்ந்த இளைஞர் மாரி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது நாளடைகவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை மாரி பாலியல் வன்கொடுமை செய்துளளார்.

arrest

இதில் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு வீட்டில் பிரசவம் நடைபெற்று, குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து, உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில், மகளிர் போலீசார், மேற்கொண்ட விசாரணையில் மாரி ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியந்தது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, மாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.