8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோவில் கைது!

 
rape

பெரம்பலூர் அருகே 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி, அதே பகுதியை சேர்ந்த பட்டறை தொழிலாளி விக்னேஷ்(30) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ், மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

pocso

இதனை தொடர்ந்து, பல முறை மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.  இதனிடையே மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில், மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணம் விக்னேஷ் என தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் தாய், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மகளிர் போலீசார், விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.