9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோவில் கைது!

 
rape

திருக்கோவிலூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 9 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிறுமி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமிக்கு அத்திப்பாக்கம் பகுதியை சேர்ந்த சாகயநாதன் என்ற இளைஞர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். 

arrest

வீட்டிற்கு திரும்பிய சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சகாயநாதனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.