கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... சேலத்தில் சோகம்!

 
dead

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கடன் தொல்லையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் சொந்தமாக வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், ரமேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். அதற்காக வட்டியாக ரூ.1 லட்சம் வரை கட்டியதாக கூறப்படுகிறது. எனினும் கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

salem

மேலும், கடன் பிரச்சினை காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றுறு ரமேஷ் வீட்டின் குளியல் அறைக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது ரமேஷ் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார்.

தகவலின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார், ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரமேஷின் மனைவி கலைவாணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.