மண்ணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

 
dead body

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மின்மோட்டாரை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கோவத்தக்குடி அரிசன தெருவை சேர்ந்தவர்கள் அங்கமுத்து -  பொன்னாயி தம்பதியினர். இவர்களது மகன் நந்தகுமார்(24). இவர் கோவத்தக்குடியில் உள்ள கோரக்கர் சித்தர் பீடத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று சித்தர் பீடத்தில் உள்ள பூஜை அறையில் மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

trichy ttn

இதில் தூக்கிவீசப்பட்ட நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நந்தகுமாரின் தாய் பொன்னாயி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.