தூத்துக்குடியில் ஜாமினில் வந்த இளைஞர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை!

 
murder

தூத்துக்குடியில் கொலை வழக்கில் ஜாமினில் வந்த இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி கேடிசி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கருப்பசாமி(27). இவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், கொலை வழக்கு ஒன்றில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருப்பசாமி கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் தெற்கு சங்கரப்பேரி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கருப்பசாமியை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, அவர்கள் தப்பிச் சென்றனர். 

police

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார், கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கடந்த 2017ஆம் ஆண்டு சங்கரப்பேரியை சேர்ந்த அங்குசாமி என்பவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும், தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.