பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பியோடிய இளைஞர்கள்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
petrol

கோவையில் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு காசு கொடுக்காமல் இருவர் தப்பிச்சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை என்.ஜி.புதூர் அருகே தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு 9.50 மணி அளவில் இருச்சர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள், ரூ.800-க்கு பெட்ரோல் போடும் படி கூறியுள்ளார். இதன்படி, பணியில் இருந்த மேலாளர் பிரபாகரன், அந்த வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர், அந்த இளைஞர்களிடம் பணம் கேட்டபோது, அவர்கள் பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

petrole

சுதாரித்துக்கொண்ட பிரபாகரன், அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபரின் கையை பிடித்து இழுத்து, வாகனத்தை நிறுத்த முயன்றார்.  எனினும் அவர்கள் அதிவேகமாக சென்றதால், பிரபாகரன் நிலைதடுமாறி அருகில் இருந்த தடுப்பில் மோதி விழுந்தார். இதுகுறித்து, அவர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.